Recent posts

பல ரூபங்களில் காந்தி - அனு பந்தோபாத்யாயா

நூல் வகை - கட்டுரை (Katturai)
ஆசிரியர் - அனு பந்தோபாத்யாயா (Anu bandobathyaya)


நாம் எந்த விஷயங்களை அற்ப விஷயங்கள், சாதாரண விஷயங்கள் என்று ஒதுக்கிவிடுகிறோமோ, அவற்றில் அவர் முழுமனதுடன் ஈடுபாடு கொண்டிருந்தது அவரது மனிதநேயத்தைக் காட்டுகிறது. அதுவே காந்திஜியின் குணாதிசயம்.
காந்திஜி வெறும் அரசியல்வாதியாகவும் பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதராகவும் மட்டும் இருக்கவில்லை. பல்வேறு பணிகளில் எவ்வாறு ஈடுபட்டிருந்தார் என்பதை இப்புத்தகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் காந்திஜியின் மனப்பாங்கை நன்கு புரிந்துகொள்ள இயலும்.

- ஜவஹர்லால் நேரு

நாட்டின் இளைஞர்களுக்காக இதை எழுதியுள்ளேன். இப்புத்தகத்தைப் படிக்கும் ஆயிரம் இளைஞர்களில் ஒருவராவது காந்திஜி செய்த ஏதாவது ஒரு பணியை மேற்கொண்டு செய்தால் அது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கும்.

- அனு பந்தோபாத்யாயா

'காந்திஜி ஒரு துப்புரவு தொழிலாளி', 'காந்திஜி ஒரு பிச்சைக்காரர்', 'காந்திஜி ஒரு தையல்காரர்', 'காந்திஜி ஒரு சமையல்காரர்', 'காந்திஜி ஒரு மருத்துவர்', 'காந்திஜி ஒரு விவசாயி', 'காந்திஜி ஒரு பத்திரிகையாளர்', 'காந்திஜி ஒரு பதிப்பாளர்', 'காந்திஜி ஒரு பணியா' என்பது போல மொத்தம் 27 தலைப்புகளில் கட்டுரைகள். ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன். அவ்வளவு சுவையான தகவல்கள், எளிமையான நடை.

காந்திஜிக்கு எத்தனை, எத்தனை விஷயங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது என்பதும், எதிலுமே அவர் நுனிப்புல் மேயவில்லை என்பதும் உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது. இதில் சில விஷயங்களை நாமும் கடைபிடித்துப் பார்க்கலாமே என்ற ஆசையும் கூட வருகிறது.

- கே. கே. மகேஷ்

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
பல ரூபங்களில் காந்தி

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
பல ரூபங்களில் காந்தி

No comments